Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

“ஒண்ணுமே புரியலே உலகத்திலே” என்ற “புரியாத புதிர்” நகைச்சுவை நடிகர் ஜே பி சந்திரபாபு

05 ஆக, 2024 - 03:38 IST
எழுத்தின் அளவு:
Comedian-JP-Chandrababu-is-an-"incomprehensible-puzzle"-of-"Onnume-Buriyale-Ulagathile".

சோதனைகள் சூழ்ந்த கலையுலகில், அவைகளை சாதனைகளாக்கி, பின் வேதனைகளை மட்டுமே விலை கொடுத்து வாங்கிய விந்தை மிகு நகைச்சுவை நாயகன் நடிகர் சந்திரபாபுவின் 97வது பிறந்த தினம் இன்று…

* முத்து நகர் என போற்றப்படும் தூத்துக்குடியில் பிறந்த முத்தான திரைக்கலைஞன் ஜே.பி சந்திரபாபு, 1927ம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று, ஜோசப் ரோட்ரிக்ஸ் மற்றும் ரோஸலின் இணையரின் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் பிச்சை பனிமயதாசன் பெர்னாண்டோ.

* கலை வாழ்விலும், காலம் தந்த இல்லற வாழ்விலும் ஏமாற்றம் ஒன்றையே இறுதியில் வெகுமதியாய் பெற்ற, யதார்த்த நாயகன்தான் நடிகர் சந்திரபாபு. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாத திரைக் கலைஞனாய் வாழ்ந்தவர் இவர்.

* போராட்டமான இவரது கலையுலகப் பயணத்தின் ஆரம்பமும், உயிரைப் பணயம் வைத்து போராடித்தான் பெற வேண்டியிருந்தது. விஷம் அருந்தி, தற்கொலைக்கு முயன்று அதன்பின் கிடைத்ததுதான் இவரது முதல் பட வாய்ப்பான “தன அமராவதி” என்ற திரைப்பட வாய்ப்பு.

* தொடர்ந்து “மோகன சுந்தரம்”, “ரத்தக்கண்ணீர்”, “குலேபகாவலி”, “மாமன் மகள்”, “மகாதேவி”, “புதையல்”, “புதுமைப்பித்தன்”, “பதிபக்தி” என அன்றைய முன்னணி நட்சத்திர நாயகர்களாக இருந்த எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் ஆகிய மூவரின் திரைப்படங்களிலும் நடித்து, முன்னணி நகைச்சுவை நடிகராக அறியப்பட்டார்.

* இவரது நகைச்சுவை நடிப்பிற்காகவே படங்கள் ஓடிய காலமும் உண்டு. இவர் திரையுலகின் உச்சத்தில் இருந்த காலகட்டங்களில், கதையின் நாயகனுக்கு இணையான ஊதியம் பெற்ற ஒரே நகைச்சுவை நடிகராகவும் இருந்திருக்கின்றார்.

* 1957ஆம் ஆண்டிலிருந்து “சென்னை சினிமா ரசிகர்கள் சங்கம்” சார்பில் ஆண்டுதோறும் திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டு வந்தது. அதில் நகைச்சுவை நடிகருக்கான முதல் விருதைப் பெற்றவர் நடிகர் சந்திரபாபு. “மணமகன் தேவை” என்ற திரைப்படத்திற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

* 'யார்ட்லிங்' எனும் மேலைநாட்டு பாடும் முறையை ஹிந்தி திரையுலகில், நடிகரும், பின்னணிப் பாடகருமான கிஷோர் குமார் அவ்வப்போது தனது பாடல்களில் பயன்படுத்தி வந்தார். தமிழ் பாடல்களில் இந்த 'யார்ட்லிங்' முறையை கொண்டு வந்த பெருமை சந்திரபாபுவையே சேரும்.

* இவர் பாடிய பாடல்கள் அனைத்தும், இன்றும் அனைவரும் கேட்டு இன்புறும் காலத்தால் அழியா காவியப் பாடல்கள். குறிப்பாக “பிறக்கும் போதும் அழுகின்றாய் , இறக்கும் போதும் அழுகின்றாய்”, “ஒண்ணுமே புரியல உலகத்திலே, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது” என்ற இந்த சோகப் பாடல்களுக்குக் கூட, ஒரு தனி சுகத்தை தந்திருக்கும் இவரது குரல். ஒரு நகைச்சுவை நடிகர் பாடிய சோகப் பாடல்கள் பெரிய அளவில் ரசிக்கப்பட்டது என்றால் அது நடிகர் சந்திரபாபுவின் பாடல்கள் மட்டுமே.

* நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை தமிழ் சினிமா உலகிற்கு கொண்டு வந்த பெருமையும் இவருக்குண்டு. தன்னைப் பார்த்து பிறர் அறிந்து கொள்ளும் வகையில் மேற்கத்திய பாணியில், புதிய நாகரீகத்தில் உடை அணிவது இவரது வழக்கமாக இருந்தது.

* இத்தனை திறமைகளும், பெருமைகளும் ஒருங்கே அமையப் பெற்ற ஒரு மாபெரும் திரைக்கலைஞன், மது என்ற அரக்கனின் கோரப் பிடியில் சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு, உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு, 1974ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 அன்று கலையுலகிலிருந்தும், இப்பூவுலகிலிருந்தும் விடை பெற்று விண்ணுலகை அடைந்தார்.

* வீழ்ந்த ஒரு மாபெரும் திரைக்கலைஞனின் வாழ்க்கையின் மறுபக்கம் எத்தகைய சோகங்களையும், வலிகளையும், ஏமாற்றங்களையும் சுமந்தவை என்பதற்கு, சரியான உதாரணமாக வாழ்ந்து மறைந்த, நடிகர் சந்திரபாபுவின் பிறந்த தினமான இன்று, அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பினை பகிர்ந்து, அவரை போற்றிப் புகழ்வதில் நாம் பெருமை கொள்வோம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : காலத்தால் அழியாத 'ஆரவல்லி'பிளாஷ்பேக் : காலத்தால் அழியாத ... அது நான் இல்லை - விஜய் ஆண்டனி அது நான் இல்லை - விஜய் ஆண்டனி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in